
சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் மாநகராட்சி அதிகாரிகளை எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியை சேர்ந்த பி.தாமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.