
கொடைக்கானல்: கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரே இடத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.