• September 1, 2025
  • NewsEditor
  • 0

சாதி ரீதியாக தன்னை ஒதுக்கிவைப்பதாக தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் புகார் கிளப்பி இருந்த நிலையில், அவரை மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது இளைஞர் காங்கிரஸ் தலைமை!

தமிழக இளைஞர் காங்​கிரஸ் தலை​வ​ராக சூரிய பிர​காஷ் அண்​மை​யில் தான் அறிவிக்​கப்​பட்​டார். இதையடுத்து சுற்​றுப் பயணத்​தில் இருக்​கும் அவர், அண்​மை​யில் தென்​காசி மாவட்ட இளைஞர் காங்​கிரஸ் ஊழியர் கூட்​டத்​தி​லும் கலந்து கொண்​டார். மாவட்ட இளைஞர் காங்​கிரஸ் தலை​வ​ரான சுரேஷ் இளவரசன் இல்​லாமல் துணைத் தலை​வர் முத்​துக்​கு​மார் தலை​மை​யில் இந்​தக் கூட்​டத்தை நடத்​தி​ய​தால் கூட்​டம் நடந்து கொண்​டிருந்த போதே தனது ஆதர​வாளர்​களு​டன் அங்கு வந்த சுரேஷ் இளவரசன், மாவட்​டத் தலை​வ​ரான தன்னை புறக்​கணித்​து​விட்டு எப்​படி கூட்​டத்தை நடத்​தலாம் எனக் கேட்டு வாக்​கு​வாதம் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *