
சாதி ரீதியாக தன்னை ஒதுக்கிவைப்பதாக தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் புகார் கிளப்பி இருந்த நிலையில், அவரை மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது இளைஞர் காங்கிரஸ் தலைமை!
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக சூரிய பிரகாஷ் அண்மையில் தான் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் அவர், அண்மையில் தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்திலும் கலந்து கொண்டார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரான சுரேஷ் இளவரசன் இல்லாமல் துணைத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் இந்தக் கூட்டத்தை நடத்தியதால் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த சுரேஷ் இளவரசன், மாவட்டத் தலைவரான தன்னை புறக்கணித்துவிட்டு எப்படி கூட்டத்தை நடத்தலாம் எனக் கேட்டு வாக்குவாதம் செய்தார்.