
திருச்சி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வரும் 3-ம் தேதி சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி,
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரேயுள்ள ஹெலிபேடு தளத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு நாளை (செப்.2) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் (செப். 3) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார். அவரை ஆட்சியர் வே.சரவணன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலை. 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.