• September 1, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் வரும் 3-ம் தேதி சுவாமி தரிசனம் செய்​கிறார். இதையொட்​டி,
ஸ்ரீரங்​கம் யாத்ரி நிவாஸ் எதிரே​யுள்ள ஹெலிபேடு தளத்​தில் அதி​காரி​கள் நேற்று ஆய்வு செய்​தனர்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் பயண​மாக தமிழகத்​துக்கு நாளை (செப்​.2) வரு​கிறார். சென்​னை​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் அவர், நாளை மறு​நாள் (செப். 3) சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் திருச்சி விமான நிலை​யத்​துக்கு காலை 10.55 மணிக்கு வரு​கிறார். அவரை ஆட்​சி​யர் வே.சர​வணன், அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர். தொடர்ந்​து, பகல் 12.10 மணி​யள​வில் ஹெலி​காப்​டரில் திரு​வாரூர் சென்​று, தமிழ்​நாடு மத்​திய பல்​கலை. 10-வது பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்​று, மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​கள் வழங்​கு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *