• September 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போக்​கு​வரத்து ஊழியர்​களின் காத்​திருப்பு போ​ராட்​டம் 2 வாரங்​களைத் தாண்டி நீடித்து வரு​கிறது. கோரிக்​கையை நிறைவேற்​று வதற்​கான கால வரையறையை அரசு அறிவிக்​காத வரை போ​ராட்​டம் தொடரும் என சிஐடியு தெரி​வித்​துள்​ளது.

போக்​கு​வரத்​துத் தொழிலா​ளர்​களுக்கு ஊதிய ஒப்​பந்த நிலு​வைத் தொகையை வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சிஐடியு சார்​பில் மாநிலம் முழு​வதும் கடந்த 18-ம் தேதி காத்​திருப்பு போ​ராட்​டம் தொடங்​கியது. சென்​னை, பல்​ல​வன் சாலை​யில் காத்​திருப்பு போ​ராட்​டத்​தில் பங்​கேற்​றவர்​களை காவல் துறை​யினர் கைது செய்​ததைத் தொடர்ந்​து, சாலை மறியல் உள்​ளிட்ட பல்​வேறு போ​ராட்​டங்​கள் நடை​பெற்​றன. இதன் தொடர்ச்​சி​யாக கோரிக்​கை​களில் ஒன்​றான ஓய்வு பெற்​றவர்​களுக்கு (2024 ஏப்​ரல் வரை) பணப்​பலனும் வழங்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *