
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் 2 வாரங்களைத் தாண்டி நீடித்து வருகிறது. கோரிக்கையை நிறைவேற்று வதற்கான கால வரையறையை அரசு அறிவிக்காத வரை போராட்டம் தொடரும் என சிஐடியு தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த 18-ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. சென்னை, பல்லவன் சாலையில் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வு பெற்றவர்களுக்கு (2024 ஏப்ரல் வரை) பணப்பலனும் வழங்கப்பட்டது.