
ஆவடி: ஆவடி அருகே கோயில்பாதாகை பகுதியில் கழிவுநீர் கலந்த மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கோயில்பதாகை, கலைஞர் நகர் முதல் கன்னடபாளையம் வரை, ஆவடி- வாணியன்சத்திரம் நெடுஞ்சாலையின் இருபுறமும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில், சுமார் ரூ.22 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.