
பெங்களூருவில் தனது நண்பர்களுடன் ஒரு வீட்டில் வசிக்கிறார், சன்னி (நஸ்லென்). எதிர் வீட்டுக்கு புதிதாக வரும் சந்திராவை (கல்யாணி பிரியதர்ஷன்) கண்டதுமே காதல் கொள்கிறார். அவருடன் பழகுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, வழக்கத்துக்கு மாறான அமானுஷ்யங்களைக் கொண்ட பெண் என்பது தெரியவருகிறது. இதற்கிடையே உடல் உறுப்புகளைத் திருடும் கும்பல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டி வருகிறது சந்திராவுக்கு. சந்திரா யார்? அவருடன் இருப்பவர்கள் யார்? அவரிடம் இருக்கும் அமானுஷ்யம் என்ன? என்பது கதை.
தொன்மக் கதை ஒன்றை நவீனத்துடன் இணைத்து, பேன்டஸி அட்வென்சர், சூப்பர் ஹீரோ கதையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டொம்னிக் அருண். அதனால், லாஜிக் விஷயங்களை விட்டுவிட்டு கதையை, நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுக்க முயன்றிருக்கும் அவருடைய திரை எழுத்தை இன்னும் கூர்மையாக்கி இருக்கலாம்.