
தருமபுரி / மேட்டூர்: நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பும் விநாடிக்கு 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.