
திருப்புவனம்: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பயன் தராது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தை சந்தித்து ஜி.கே.வாசன் ஆறுதல் கூறினார். மாநில தொண்டரணித் தலைவர் அயோத்தி, முன்னாள் எம்எல்ஏ உடையப்பன், மாவட்டத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜலிங்கம், கவுன்சிலர்கள் பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: