
சென்னை: ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க முதல்வர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அரசு உயர்த்தியுள்ள இறக்குமதி வரியால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு தமிழக அரசு ஏற்படுத்திய இடையூறுகள், பிரச்சினைகள் ஏராளம். அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை.