• September 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆயத்த ஆடை தொழிலில் ஏற்​பட்​டுள்ள தொய்​வைப் போக்க முதல்​வர் ஸ்டா​லின் ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அமெரிக்க அரசு உயர்த்​தி​யுள்ள இறக்​குமதி வரி​யால் பாதிப்​படைந்​துள்ள திருப்​பூர் பின்​னலாடைத் தொழிலைப் பாது​காக்க நடவடிக்கை எடுங்​கள் என்று பிரதமரை, தமிழக முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். 2021-ல் ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் தற்​போது வரை ஜவுளி மற்​றும் பின்​னலாடைத் தொழில்​களுக்கு தமிழக அரசு ஏற்​படுத்​திய இடையூறுகள், பிரச்​சினை​கள் ஏராளம். அதனால், அந்​தத் தொழில்​கள் ஏற்​கெனவே நலிவடைந்​துள்​ளது என்​பதே உண்​மை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *