
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 78 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. 1992-ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஏப். 1-ம் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.