
சென்னை: மதுரையில் செப்.4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.
அதிமுகவை கைப்பற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சட்டப் போராட்டம் தொய்வடைந்து வரும் நிலையில், பாஜகவும் அவரை கைவிட்டது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததிலிருந்து, பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளவில்லை என விரக்தியில் இருந்தார்.