• September 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வடக்கு காஷ்மீரின் குரேஸ் என்ற எல்​லைக் கட்​டுப்​பாட்​டுப் பகு​தி​யில் கடந்த மாதம் 28-ம் தேதி நடை​பெற்ற துப்​பாக்கி சண்​டை​யில், ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்​கப்​படும் ‘பகு கான்’ என்ற தீவிர​வாதி உட்பட 2 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இவர் கடந்த 10 ஆண்​டு​களுக்கு மேலாக பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களின் ஊடுரு​வலுக்கு உதவிய​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

காஷ்மீரின் பந்​திப்​போரா பகு​தி​யில் நசேரா நர் என்ற இடத்​தில் உள்ள எல்​லைக் கட்​டுப்​பாட்​டுப் பகு​தி​யில் தீவிர​வாத ஊடுரு​வல் முயற்சி நடை​பெறு​வதை ராணுவத்​தினர் கண்​டு​பிடித்​தனர். இதையறிந்​ததும் தீவிர​வா​தி​கள் துப்​பாக்கிச் சூடு நடத்​தினர். ராணுவத்​தினர் நடத்​திய பதில் தாக்​குதலில் 2 தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இதில் ஒரு​வர் பகு கான் என்​பது தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *