
புதுடெல்லி: வடக்கு காஷ்மீரின் குரேஸ் என்ற எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்கப்படும் ‘பகு கான்’ என்ற தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் நசேரா நர் என்ற இடத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தீவிரவாத ஊடுருவல் முயற்சி நடைபெறுவதை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இதையறிந்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பகு கான் என்பது தெரியவந்தது.