
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் தொட ரும் பருவமழையின் சீற்றம் காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதித்துள்ளது.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளதாவது: மேகவெடிப்பு மற்றும் கன மழையால் இமாச்சல பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று தேசிய நெடுஞ்சாலைகள், 1,236 மின் மாற்றிகள், 424 நீர் வழங்கல் திட்டங்கள், 819 சாலைகள் சேதமடைந்துள்ளன.