
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் கோப்புகளை ஒப்படைத்து சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமனை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டார். தமிழக காவல் துறையின் நிர்வாக பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு பணியும், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.