
சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் பந்தல் அமைத்து, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.