
சென்னை/ திருப்பூர்: அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, நேற்று (ஆக.28) அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் தொழில் துறை கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. ஜவுளித் தொழிலின் முக்கிய அங்கமாக இருக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.