
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
இஸ்ரோ சார்பில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. இங்கு 2,292 ஏக்கர் பரப்பில் ரூ.986 கோடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி கடந்த 2024 பிப். 28-ல் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ரூ.100 கோடியில் ராக்கெட் லாஞ்ச் பேட் எனப்படும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.