
சென்னை: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மேற்கத்திய அதிகார அரசியலில் கொள்கை எனும் முகமூடியால் தண்டனை எனும் நாடகம் அடங்கேற்றப்படும் என்பதை அமெரிக்கா மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, காலனி ஆதிக்கத்தால் இந்தியா சூறையாடப்பட்டிருந்தாலும், நாம் ஒருபோதும் உடைந்துவிடவில்லை.