
மதுரை: மதுரை ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் இன்று தகுதியற்ற நடுவர்களால் சிலம்பம் போட்டிகளை நடத்துவதாகக் கூறி வீரர்கள், அவர்களது பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மதுரையில் ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதனயொட்டி இன்று மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. இதில் கலந்துகொள்ள மாவட்டம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவியர்கள் காலை 6 மணிக்கே வருகை தந்திருந்தனர்.