
மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுக்கு பொறுப்பேற்று மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், மாநகர அதிமுக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியவது: “மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத மேயரின் கணவர் சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவர் செய்த முறைகேடுகளுக்கு மாநகராட்சி மேயர்தானே காரணம். அவர் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும். அவர் பதவி விலகாததால், அவர் பதவி விலக வேண்டும் அல்லது தமிழக அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது.