• August 28, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று 30 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அவர்களில் இருபது பேருக்கு 81 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கரில் சமீபத்திய மாதங்களில், அதிகளவில் மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று 9 பெண்கள் உட்பட 30 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அவர்களில் 20 பேருக்கு 81 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார். மேலும், மாநில அரசின் மறுவாழ்வுக் கொள்கையின் கீழ், அவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *