• August 27, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர் / தருமபுரி: ​கா​விரி நீர்பிடிப்​புப் பகு​தி​களில் மழை குறைந்​துள்​ள​தால் மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 12,850 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 7,643 கனஅடி​யாக குறைந்​தது. அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 12,000 கன அடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு 850 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

நீர்​வரத்தை விட, தண்​ணீர் திறப்பு அதி​க​மாக இருப்​ப​தால் அணை நீர்​மட்​டம் குறைந்​துள்​ளது. கடந்த 6 நாட்​களுக்கு பிறகு முழு கொள்​ளள​வான 120 அடி​யில் இருந்​தது நீர்​மட்​டம் 119 அடி​யாக நேற்று சரிந்​தது. ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் 12,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 6,500 கனஅடி​யாக குறைந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *