
மேட்டூர் / தருமபுரி: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 12,850 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,643 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு 850 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களுக்கு பிறகு முழு கொள்ளளவான 120 அடியில் இருந்தது நீர்மட்டம் 119 அடியாக நேற்று சரிந்தது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 12,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,500 கனஅடியாக குறைந்தது.