
சென்னை: அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் தொழில் நகரங்களில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில், "அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் யுத்த வெறிக் கொள்கை உலகம் அறிந்துள்ள செய்தியாகும். அந்த நாட்டின் அதிபராக டோனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட (ஜனவரி 2025) ஆரம்ப நாளிலிருந்து இந்தியா மீதான வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். அங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இந்தியர்களின் "விசா"வை காரணமாக்கி, அவர்களை போர்க்கைதிகளை போல், கைகளில் விலங்கு போட்டு திருப்பி அனுப்பி அவமதித்தார்.