
சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த கர்நாடக முதல்வருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்து வரும் நிலையிலும், மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது ஏனென்றே தெரியவில்லை என கர்நாடக சட்டப்பேரவையில், அம்மாநில முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.