
திருப்பத்தூர்: ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு நாளை (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). இவர், பள்ளிகொண்டாவில் தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி மாயமானார். அவரை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனி மனுதாக்கல் செய்தார்.