• August 27, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சர், குடிநீர் வாரிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை சவுரப் பரத்வாஜ் வகித்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவுக்கான தலைவராக உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவ கட்டுமான திட்டங்களில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக அளித்த புகாரின் பேரில் டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை (ஏசிபி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதுகுறித்து ஏசிபி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 2018-19-ல் ரூ.5,590 கோடி மதிப்பிலான 24 மருத்துவமனை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுபோல் ரூ.1,125 கோடி செலவிலான ஐசியு மருத்துவமனை திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன" என்று தெரிவித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *