• August 27, 2025
  • NewsEditor
  • 0

கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி 4 டன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு புலியகுளம் முந்தி விநாயகர் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (ஆக.27) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரசித்தி பெற்ற, ஒரே கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்ட விநாயகரான புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகவேள்வி தொடங்கி சிறப்பு மகா அபிசேகம் நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *