• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​கள் நள்​ளிர​வில் கைது செய்​யப்​பட்​டதைக் கண்​டித்து மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​திலிருந்து இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி கவுன்​சிலர்​கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநக​ராட்சி மன்​றக்​கூட்​டம் மேயர் ஆர்​.பிரி​யா, தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

அப்​போது, ரிப்​பன் மாளிகை முன்​பு, 13 நாட்​களாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​களை வலுக்​கட்​டாய​மாக நள்ளிர​வில் கைது செய்​ததைக் கண்​டித்​து, திமுக கூட்​டணி கட்​சிகளான இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி கவுன்​சிலர்​கள் 4 பேர், ‘தூய்​மைப் பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்’ என கோஷம் எழுப்​பிய​வாறு மாமன்ற கூட்​டத்​திலிருந்து வெளிநடப்பு செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *