
சென்னை: சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அக்
கல்லூரியின் டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை வேப்பேரியில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் டீனாக இருந்தவர் மருத்துவர் சி.சவுந்தரராஜன். இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை நல கல்வி மையத்தில் சுமார் ரூ.5 கோடி வரை டீன் சவுந்தரராஜன் முறைகேடு செய்திருப்பதாக, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திடம் மையத்தின் இயக்குநர் புகார் அளித்தார்.