
புதுடெல்லி: நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள், விவசாயிகளை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் கவலையில்லை’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்தார். உலக நாடுகளுக்கு அதிகபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரியை அறிவித்தார்.
இதற்கான உத்தரவில் நேற்று ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதையடுத்து அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்படும். இந்த நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.