
புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்மையில் வெளியானது. அதில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உத்தராகண்ட் மாநிலம், பவுரி கர்வால் அருகே கிரி என்ற மலைக்கிராமத்தில் கடந்த 1945-ம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்தார். உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் ஹேம்வதி நந்தன் பகுகுணாவின் நெருங்கிய உறவினரான அவர், கடந்த 1968-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியானார்.
கேரள காவல் துறையில் பணியாற்றிய தோவல், கடந்த 1971-ம் ஆண்டில் தலச்சேரியில் நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்தி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார். கடந்த 1972-ம் ஆண்டில் இந்திய உளவுத் துறையில் அஜித் தோவல் இணைந்தார்.