
சென்னை: டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43-வது கூட்டத்தில், செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37 டிஎம்சி நீரை விடுவிப்பதை உறுதி செய்ய தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43-வது கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினரான நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் இரா.சுப்பிரமணியம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.