• August 27, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: பஞ்​சப்​பூரில் அமைச்​சர் கே.என்​. நேரு​வுக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்கப்பட்டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யிருந்த நிலை​யில்,‘எனக்கு அங்கு 300 ஏக்​கர் நிலம் இருந்தால், அதை பழனி​சாமியே எடுத்​துக் கொள்​ளலாம்’ என்று அமைச்​சர் கே.என்​.நேரு கூறினார்.

திருச்சி மேலப்​புதூர் புனித பிலோமி​னாள் பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை தொடங்கி வைத்த பின்​னர் அமைச்​சர் கே.என்​.நேரு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: துறையூரில் ஆக.24-ம் தேதி நடை​பெற்ற அதி​முக கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வந்​தது, நோயாளியை காப்​பாற்​று​வதற்​காகவே தவிர, வேறு எந்த நோக்​கத்​துக்​காக​வும் அல்ல. துறையூரில் ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் தாக்​கப்​பட்​டதற்கு அதி​முக​வினரே காரணம். அவர்​களே 108 ஆம்​புலன்​ஸுக்கு போன் செய்து வரவழைத்து தாக்​கிய​தாக காவல் துறை தரப்​பில் எனக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *