• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​கீழ் 25 சதவீத ஒதுக்​கீட்​டில் மாணவர்​கள் விண்​ணப்​பிக்க வழி​யில்​லாமல் அதற்கான இணை​யதள பக்​கத்தை முடக்கி வைத்​திருப்​பது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பியுள்​ளனர். கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடஒதுக்​கீட்​டில் ஏழை, எளிய மாணவர்​களுக்கு சேர்க்​கைக்​கான இணை​யதள பக்​கம் முடக்​கப்​பட்​டுள்​ள​தாக​ கூறி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க நிர்​வாகி வே.ஈஸ்​வரன் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், கல்வி உரிமை சட்​டத்​தின்​படி மத்​திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்​டும் என்​றும், தமிழக அரசும் நிதி கிடைப்​பதை காரணம் காட்​டா​மல் நிதியை வழங்க வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *