• August 26, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை மாநகராட்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்களின் சொத்து வரியை மறு ஆய்வு செய்ய வார்டுக்கு ஒரு குழு வீதம் நூறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ரவி, மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கின் விசாரணையை தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு படைக்கு மாற்றி உத்தரவிட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *