
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின், கூட்டுறவு பெயர்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ள பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய உணவு பாதுகாப்புத் துறையினர் 14 நாட்களுக்குள் பெயர் பலகையை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.
ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பால்கோவா கடைகளில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி பால்கோவா கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் விளம்பர போர்டுகள் மற்றும் பாக்கெட்டுகளில் ஆவின், கூட்டுறவு மற்றும் அரசு முத்திரையை சட்ட விரோதமாக பயன்படுத்தி பால்கோவா விற்பனை செய்தது தெரியவந்தது.