
மதுரை: மதுரை மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்வதால், அவரது இந்த பயணம் வெற்றி பெற முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து 4 நாட்களுக்கு மதுரையில் பிரச்சாரப் பயணம் செய்யவுள்ளார். அவரின் இந்த சுற்றுப் பயணம் வெற்றி பெறுவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், இபிஎஸ் சுற்றுப் பயணத்துக்கான அழைப்பிதழை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.