
சென்னை: மாநகராட்சியின் 32 சேவைகளை வாட்ஸ்அப்பில் வழங்கும் திட்டத்தை, ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். மக்கள் எவ்வித அலைச்சலுமின்றி, தாங்கள் இருந்த இடத்திலிருந்து இச்சேவைகளை பெற முடியும்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி மக்களுக்கான சேவைகள் தற்போது நம்ம சென்னை செயலி, மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in), 1913 அழைப்பு மையம், சமூக வலைதளங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேயர் ஆர்.பிரியா 2025-26-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்அப் வழியாக வழங்கப்படும் என அறிவித்தார்.