• August 26, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வைஷ்ணவி தேவி கோயிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீருக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல, டெல்லிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைஷ்ணவி தேவி கோயில் ரியாசி மாவட்டத்தில் கத்ராவுக்கு அருகிலுள்ள திரிகுடா மலைகளில் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்த கோயிலுக்கு பாரம்பரியமாக கத்ராவிலிருந்து 13 கி.மீ நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், கனமழை காரணமாக வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பாரம்பரியாக செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கோயிலுக்கு பேட்டரி கார் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகள் நிறுத்தப்பட்டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *