
பட்ஜெட் (Budget) போடுவது ஒரு கடினமான வேலையில்லை. இது ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு முக்கிய அம்சமாகும். ஆனால் உண்மையில் பலருக்கும் இது ஒரு சலிப்பான விஷயமாக இருக்கலாம். எனினும் வார இறுதியில் செய்த ஆடம்பர செலவுகளுக்குப் பிறகு ஏற்படும் குற்ற உணர்ச்சியின் போது, பட்ஜெட் போட்டு செலவு செய்திருக்கலாமோ அல்லது செலவைக் குறைத்திருந்தால் சேமிப்பை அதிகப்படுத்தியிருக்கலாமோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆக, இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள்ளும் எழாமல் இருக்க வேண்டும், அதேசமயம் நிகழ்காலத்திலும் வாழ வேண்டும். எதிர்காலத்திற்காகவும் திட்டமிடுதல் வேண்டும் என்பவர்கள் 30 – 30 – 30 – 10 என்ற விதியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வாழ்க்கையில் எதிர்காலத்தில் எந்த சிக்கலும் ஏற்படாது. நிகழ்காலத்திலும் எந்த கவலையும் இல்லாமல் முழுமையாக மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
30 – 30 – 30 – 10 – நான்கு முக்கிய அம்சங்கள்:
30 – 30 – 30 – 10 விதியானது ஒவ்வொருவரின் மாத வருமானத்தையும் நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பகுதியும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுகின்றன.

1. 30% வீட்டுச் செலவுகள்
உங்கள் வருமானத்தில் 30% வீட்டு வாடகை, வீட்டுக் கடன் தவணை அல்லது வீட்டு பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
2. 30% அத்தியாவசிய தேவைகள்
இரண்டாவது 30% தொகையை உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய செலவுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதில் மளிகை பொருட்கள், குழந்தைகளின் கல்விச் செலவுகள், போக்குவரத்து செலவுகள், மருத்துவ செலவுகள் மற்றும் தொலைபேசி, இணையக் கட்டணங்கள் உள்ளிட்ட பலவும் அடங்கும். இது உங்கள் அன்றாட வாழ்க்கை சீராக வைத்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும்.
3. 30% நிதி இலக்குகள்
மூன்றாவதாக இருக்கும் இந்த 30% பகுதியானது எதிர்காலத்திற்கான ஒரு மாய பானை என்று கூறலாம். ஏனெனில் குழந்தைகளின் கல்வி கனவுகளை நிறைவேற்றும், திருமண செலவினங்கள், கனவு வீட்டை கட்டவும், ஓய்வு கால திட்டமிடல் என பலவற்றிலும் சரியாக திட்டமிட்டு நீண்ட கால முதலீடு செய்தல் இப்பிரிவில் அடங்கும். மொத்தத்தில் ஒவ்வொருவரின் கனவுகளும் நனவாக உதவும் பகுதியாகவும் இப்பிரிவு இருக்கும்.
4. 10% வாழ்க்கை முறை செலவுகள்
இது ஒவ்வொருவரின் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் ஒரு பகுதி. இதற்காக ஒருவர் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் 10% தொகையை செலவிடலாம். இதில் உணவகங்களுக்கு சென்று உணவு அருந்துதல், திரைப்படங்களுக்கு செல்லுதல், பிடித்தமான புதிய பொருட்களை வாங்குதல் அல்லது வார இறுதியில் குடும்பத்துடன் பயணங்கள் செல்லுதல் போன்ற பல செலவுகளும் அடங்கும்.
ஏன் ஏற்றது?

இந்த விதியானது குறிப்பாக மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் மக்களுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். ஏனெனில் இப்பகுதிகளில் வீட்டு வாடகை முதல் கல்விச் செலவுகள் வரையில் அதிகம். வழக்கமான 50 – 30 – 20 என்ற விதி (50% அத்தியாவசிய செலவுகள், 30% தனிப்பட்ட செலவுகள், 20% சேமிப்பு மற்றும் முதலீடு) இவர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. ஆனால் 30 – 30 – 30 – 10 விதியானது வாழ்க்கை செலவினங்கள் அதிகமாக கணக்கில் கொள்வதோடு, சேமிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. மொத்தத்தில் செலவையும் சமாளிக்கனும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் இவ்விதி ஏற்ற ஒன்றே.
எப்படி வேலை செய்கிறது?
ஒருவரின் மாத வருமானம் ரூ.1 லட்சம் என வைத்துக் கொள்வோம்.
ரூ.30,000-வீட்டு வாடகை, வீட்டு கடன் தவணை மற்றும் பராமரிப்பு, தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்கள் என வீடு சம்பந்தப்பட்ட அனைத்தும் இதில் அடங்கும்.
ரூ.30,000 – வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், குழந்தைகளின் கல்வி செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகள் என பலவும் அடங்கும்.
ரூ.30,000 – எஸ்.ஐ.பி மற்றும் மற்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், பிபிஎஃப், என்பிஎஸ் அல்லது அவசர கால தேவைக்கான முதலீடுகள் என பலவும் இதில் அடங்கும்.
ரூ.10,000 – வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க தேவையான அம்சங்களுக்கு செலவிடப்படும். உதாரணத்திற்கு குடும்பத்துடன் வெளியில் சென்று உணவு அருந்துதல், வார இறுதியில் தூர பயணம் செய்தல், ஓடிடி போன்ற அம்சங்கள், திருமணம் அல்லது பிறந்த நாள் கொண்டாட்ட விழாக்கள் என அனைத்தும் இதில் அடங்கும்.
மொத்தத்தில் இவ்விதியை பின்பற்றுவதன் மூலம்ம் ஒருவரின் வருமானத்தை சரியாக நிர்வகிக்க முடியும். அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டுமே அதிக செலவழிக்காமல், எதிர்காலத்திற்கும் முதலீடு செய்வீர்கள். தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் நிச்சயம் நிதி சுதந்திரம் என்பதும் இருக்கும்.
இதுவும் நடக்கும்?

ஆரம்பத்தில் பெரும்பாலான மக்கள் வெறும் 5,000 ரூபாயை முதலீடு செய்யத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க பின்னர் ரூ.25,000-ஐ கூட முதலீடு செய்து வரலாம். முதலீட்டை அதிகரிப்பதோடு அவசர கால நிதியையும் அதிகரித்திருக்கலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கணிசமான தொகையை சேர்த்திருக்கலாம். இதனால் அவர்களின் எதிர்காலமும் எவ்வித சிக்கலும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ள முடியும். சேமிப்புகள் அதிகரிக்கும் அதேவேளையில், கடனும் குறைந்திருக்கும். புதிதாக கடன் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆக எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும்.
விதியை மாற்றி அமைக்க முடியுமா?

ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட சூழலுக்கு ஏற்ப விதியை மாற்றிக் கொள்ள முடியும்.
1. ஒருவர் தனது பெற்றோருடன் வசிக்கிறார் என வைத்துக் கொள்வோம். வீட்டுச் செலவுக்கு ஒதுக்கப்படும் தொகையை மிச்சப்படுத்தி, அதை தனிப்பட்ட செலவுகளுக்கோ அல்லது முதலீடுகளுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் அவரவர் சராசரி வருமானத்தின் அடிப்படையில் இந்த விதியைப் பயன்படுத்தலாம்.
3. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பின், இருவரின் வருமானத்தையும் கொண்டு, செலவுகளை பிரித்துக் கொண்டு திட்டமிடலாம். இது ஒரு நெகிழ்வுத்தன்மையை வழங்கலாம். நிதி ஒழுக்கத்தையும் மேம்படுத்தலாம்.
ஒருவர் மேற்கண்ட விதியை மிகச் சரியாக துல்லியமான அளவுகளுடன் செய்ய வேண்டும் என்பது முக்கியமான விஷயம் அல்ல. இங்கு சரியாக திட்டமிட்டு ஒவ்வொன்றுக்கும் என பிரித்து செய்யும் நிதி ஒழுக்கம் அவசியம். செய்யும் முதலீட்டை தொடர்ந்து செய்வது அவசியம். அவ்வாறு செய்யும்போது சிறிய தொகையாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் கூட்டு வட்டியின் பலனால் மிகப்பெரிய கார்ப்பஸ்-ஐ பெற முடியும். செலவுகளையும் கட்டமைக்க முடியும்.
நிதி இலக்குகள் அதிகம் கவனம்?

30- 30 – 30 -10 விதியில் ஒருவர் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி 3 வது பகுதியான நிதி இலக்குகள். எதிர்கால நிதி தேவை அறிந்து அதற்கேற்ப திட்டமிடுதல் அவசியம்.
· இங்குதான் எதிர்காலத்திற்கு தேவையான ஓய்வு கால நிதியை உருவாக்குவோம்.
· குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு சேமிக்கிறோம்
· அவசர கால நிதியை உருவாக்கி வைக்கலாம்
· நீண்ட கால இலக்குகளான வீடு அல்லது தொழில் தொடங்க தேவையான நிதியை உருவாக்கிக் கொள்ளலாம்.
· சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதந்தோறும் 10,000 ரூபாய் முதலீட்டை ஆரம்ப காலத்திலேயே இருப்பது அவசியம். எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறமோ அவ்வளவு விரைவில் 20 – 25 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் வளர்ச்சி அடையலாம்.
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.