
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கோலகலமாக நடைபெற்றது. இதில் லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.