• August 26, 2025
  • NewsEditor
  • 0

விசாகப்பட்டினம்: ஐஎன்​எஸ் உதயகிரி, ஐஎன்​எஸ் ஹிம்​கிரி என்ற இரு போர்க்​கப்​பல்​கள் இன்று கடற்​படை​யில் இணைக்​கப்பட உள்​ளன. இந்​திய கடற்​படை​யில் 135-க்​ கும் மேற்​பட்ட போர்க்​கப்​பல்​கள் உள்​ளன. இதில் ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகியவை விமானந்​தாங்கி போர்க்​கப்​பல்​கள் ஆகும். 20 நீர்​மூழ்​கி​களும் கடற்​படை​யில் உள்​ளன. வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் இந்​திய போர்க்​கப்​பல்​களின் எண்​ணிக்​கையை 160 ஆகவும், 2035-ம்ஆண்​டில் 200 ஆகவும் அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

இதற்​காக உள்​நாட்​டிலேயே போர்க்​கப்​பல்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில் ‘பு​ராஜக்ட் 17ஏ' என்ற திட்​டத்​தின் அடிப்​படை​யில் சிறிய ரகத்தை சேர்ந்த 7 போர்க்​கப்​பல்​கள் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன. இந்த போர்க்​கப்​பல்​களுக்கு நீல​கிரி, ஹிம்​கிரி, தாராகிரி, உதயகிரி, துனாகிரி, விருதகிரி, மகேந்​திரகிரி என்று இந்​திய மலைகளின் பெயர்​கள் சூட்​டப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு கப்​பலும் ரூ.4,000 கோடி மதிப்பு கொண்​டவை ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *