
விசாகப்பட்டினம்: ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி என்ற இரு போர்க்கப்பல்கள் இன்று கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையில் 135-க் கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆகவும், 2035-ம்ஆண்டில் 200 ஆகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘புராஜக்ட் 17ஏ' என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறிய ரகத்தை சேர்ந்த 7 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த போர்க்கப்பல்களுக்கு நீலகிரி, ஹிம்கிரி, தாராகிரி, உதயகிரி, துனாகிரி, விருதகிரி, மகேந்திரகிரி என்று இந்திய மலைகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கப்பலும் ரூ.4,000 கோடி மதிப்பு கொண்டவை ஆகும்.