• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறியிருப்பதாவது: தமிழக மின்​வாரி​யத்​துக்கு சொந்​த​மான மேட்​டூர், எண்​ணூர், துாத்​துக்​குடி உள்​ளிட்ட 5 அனல்​மின் நிலையங்களில் வெளி​யாகும் உலர் சாம்​பலில், 20 சதவீதம் சிறுமற்​றும் குறுந்​தொழில் நிறு​வனங்​களுக்கு இலவச​மாக வழங்கப்படுகிறது. மீத​முள்ள உலர் சாம்​பல் மற்ற நிறு​வனங்​களுக்கு விற்​கப்​படு​கிறது.

இந்த நடை​முறையை பின்​பற்​றாமல் சேலம் மாவட்​டம் மேட்​டூர் அனல்​மின் நிலை​யத்​திலிருந்து வெளி​யாகும் உலர் சாம்​பல் சிறு மற்றும் குறு நிறு​வனங்​களுக்கு பகிர்ந்து அளிக்​கப்​ப​டா​மல் நேரடி​யாக தனி​யார் நிறு​வனம் ஒன்​றுக்கு மொத்​த​மாக சட்​ட​விரோதமாக குறைந்த விலைக்கு விற்​கப்​படு​கிறது. பின்​னர் அந்த நிறு​வனம் உலர் சாம்​பலை வெளி​மார்க்​கெட்​டில் அதிக விலைக்கு விற்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *