
சென்னை: இந்திய கடல்சார் உச்சி மாநாடு வரும் அக்.27-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இதன்மூலமாக, ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய கடல்சார் உச்சிமாநாடு வரும் அக்.27-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் உட்பட கடல்சார் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் நாட்டின் முக்கியத்தளம் ஆகும்.