
புதுடெல்லி: லாபம் பெறுவதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் உண்டு. இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆலோசனை பெறுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி உ.பி.யின் வாராணசியிலிருந்து ஒரு கும்பல் இலவச ஆலோசனை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்காக, அந்த கும்பல் உ.பி.யின் வாராணசியில் இரண்டு கால்சென்டர்களையும் நடத்தி வந்துள்ளது. இவர்கள் காட்டிய ஆசை வலையில் வீழ்ந்தவர்கள் தங்களது வங்கி மற்றும் டீமேட் கணக்குகளின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளனர்.