
புதுடெல்லி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது.
அதன்படி ஆண்டுதோறும் எம்பிபிஸ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களில் வேறு மாணவர்களை சேர்த்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.