
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திட்டத்தின் 5-ம் கட்ட விரிவாக்கத்தால் 750 கூடுதல் சமையலறைகள் உருவாக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 3.05 லட்சம் மாணவ, மாணவியருக்கு முதல்வரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.