• August 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நாளை தமிழகம் வருகிறார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் தனது பதவியை ராஜி​னாமா செய்​ததை அடுத்​து, அந்த பதவிக்கு செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது.

தமிழகத்தை சேர்ந்த மகா​ராஷ்டிரா ஆளுநர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன் பாஜக கூட்​டணி வேட்​பாள​ராக​வும், தெலங்​கா​னாவை சேர்ந்த உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி இண்​டியா கூட்​டணி வேட்​பாள​ராக​வும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில், இண்​டியா கூட்​டணி வேட்​பாளர் சுதர்​சன் ரெட்டி கடந்த 24-ம் தேதி சென்னை வந்​து, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட திமுக கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களை சந்​தித்து ஆதரவு கோரி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *