• August 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதி்த்​துள்ள உச்ச நீதி​மன்​றம், தற்​போதைய நிலையே தொடர உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை கொடிக்​குளத்​தைச் சேர்ந்த அமா​வாசை தேவர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில், விளாங்​குடி​யில் அதி​முக சார்​பில் கொடிக்​கம்​பம் அமைக்க அனு​மதி கோரி தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், பொது இடங்​கள், சாலைகள், உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​குச் சொந்​த​மான இடங்​களில் நிரந்​தர​மாக வைக்​கப்​பட்​டுள்ள அனைத்து அரசி​யல் கட்​சிகள், சாதி, மத மற்​றும் பிற அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்​றும், தேவைப்​பட்​டால் இந்த கொடிக் கம்​பங்​களை, அவர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் வைத்​துக்​கொள்​ளலாம் என்​றும் உத்​தர​விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *